Monday, April 25, 2011

சந்தேகம்

மரமே இல்லாமல் பூத்துக் குலுங்கும்
நட்சத்திரப் பூக்கள்,
ஏற்றுவார் இன்றி எரிந்துக்கொண்டிருக்கும்
சூரிய தீபம்,
விலாசம் தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கும்
விண்மீன் கூட்டம்,
அறிவியலுக்கே தெரியாத
அண்டத்தின் ரகசியங்கள்,
அனைத்தையும் மிஞ்சியது
மழலையின் சந்தேகம்,
"நிலாவுக்கு லைட்டு போட்டது யாரும்மா ?"   

1 comment:

Deva said...

Good one...

குறளோசை

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.