Wednesday, April 3, 2013

கலைகளம்


தினம் தினம் உன்னைத் 
தீண்டிக் களிக்கின்றேன் 
ஒவ்வொரு முறையும் 
வர்ணஜாலங்கள் காட்டுகிறாய்

உன் கண்களின் மூலம் 
நான் உலகத்தை பார்க்கிறேன்

உன் மீது கொண்ட மோகம் 
காண்பவை அனைத்தையும் 
அழகாய் மிளிரச் செய்கிறது

உன் வண்ணங்களில் திளைக்கின்றேன்
நீ என்னை மீண்டும் மீண்டும்
பூரிப்படையச் செய்கிறாய்

உன் வளைவுகளில் வருடி
உன்னை உசுப்பேற்றி
நடுக்கமின்றி இறுக்கி அணைத்து 
என் ஆள்காட்டி விரல்கொண்டு
அழுத்திய நொடி
உன் முத்த சத்தத்துடன் பிரசவிக்கிறது
நான் எடுத்த வண்ண புகைப்படம் !

காமிரா என் காதலி !! :)

குறளோசை