தினம் தினம் உன்னைத்
தீண்டிக் களிக்கின்றேன்
ஒவ்வொரு முறையும்
வர்ணஜாலங்கள் காட்டுகிறாய்
உன் கண்களின் மூலம்
நான் உலகத்தை பார்க்கிறேன்
உன் மீது கொண்ட மோகம்
காண்பவை அனைத்தையும்
அழகாய் மிளிரச் செய்கிறது
உன் வண்ணங்களில் திளைக்கின்றேன்
நீ என்னை மீண்டும் மீண்டும்
பூரிப்படையச் செய்கிறாய்
உன் வளைவுகளில் வருடி
உன்னை உசுப்பேற்றி
நடுக்கமின்றி இறுக்கி அணைத்து
என் ஆள்காட்டி விரல்கொண்டு
அழுத்திய நொடி
உன் முத்த சத்தத்துடன் பிரசவிக்கிறது
நான் எடுத்த வண்ண புகைப்படம் !
காமிரா என் காதலி !! :)
2 comments:
un moolam naan edutha
vannamgalai - vannam illavidinum azhagundu endru ninaivutinai!!!
awesome machi
நல்ல சிந்தனை..
நன்றி நண்பா..
Post a Comment