Thursday, February 14, 2013

காதலர் தினம்

படபடக்கும் என் இதயத் துடிப்பை
பக்குவப்படுத்த முயல்கிறது 
என் மார்போடு அணைத்திருந்த 
வாழ்த்து அட்டையும் 
ரோஜா மொட்டும் !

ஆயிரம் கதைகள் பேசினாலும்
உள்ளத்தில் உள்ளதை மட்டும் 
மறைக்கும் உன் கண்களை
காட்டிக் கொடுக்கிறது
உன் புத்தகத்திலிருந்து எட்டிப் பார்க்கும் 
செவ்விதயம் பொரித்த கைக்குட்டை !

வார்த்தைகளை விழுங்கிவிட்டு 
பார்வைகளை மட்டுமே
பரிமாறிக்கொண்டிருந்த 
நம் இருவரின் மௌனத்தையும் 
கலைத்துவிட்டு போகிறது 
தென்றல் காற்று !

எதுவும் பேசாத போதும் 
எல்லாம் புரிந்ததாய் 
சிரித்துக் கொள்கிறோம் !

உன் கண்முன்னே மலர் நீட்டி 
"நீ என் உயிரோடு கலப்பாயா ?"
என்று நான் கேட்ட நொடி 
நான் ஆண்மகன் என்றும் உணராமல்
வெட்கப்படுகிறது என் உள்ளம் ! 

அதை நீ வாங்கிக் கொண்டபோதே
சம்மதம் தெரிவித்தது 
உன் விழியில் வழிந்த கண்ணீர் !

உன்னிடம் கேட்காமலேயே 
நீ எனக்காக கொண்டு வந்திருந்த 
கைக்குட்டை எடுத்து 
உன் கண்ணீர் துடித்தன என் விரல்கள் !

இது போதும் அன்பே 
நாம் காதலில் வென்றுவிட்டோம் 
காலத்தையும் வென்றுவிட்டோம் !

2 comments:

Poornima said...

do we get to see a video of this :)

Sugan said...

If I take a short film of this kind.. will let you know :)

குறளோசை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.