படபடக்கும் என் இதயத் துடிப்பை
பக்குவப்படுத்த முயல்கிறது
என் மார்போடு அணைத்திருந்த
வாழ்த்து அட்டையும்
ரோஜா மொட்டும் !
ஆயிரம் கதைகள் பேசினாலும்
உள்ளத்தில் உள்ளதை மட்டும்
மறைக்கும் உன் கண்களை
காட்டிக் கொடுக்கிறது
உன் புத்தகத்திலிருந்து எட்டிப் பார்க்கும்
செவ்விதயம் பொரித்த கைக்குட்டை !
வார்த்தைகளை விழுங்கிவிட்டு
பார்வைகளை மட்டுமே
பரிமாறிக்கொண்டிருந்த
நம் இருவரின் மௌனத்தையும்
கலைத்துவிட்டு போகிறது
தென்றல் காற்று !
எதுவும் பேசாத போதும்
எல்லாம் புரிந்ததாய்
சிரித்துக் கொள்கிறோம் !
உன் கண்முன்னே மலர் நீட்டி
"நீ என் உயிரோடு கலப்பாயா ?"
என்று நான் கேட்ட நொடி
நான் ஆண்மகன் என்றும் உணராமல்
வெட்கப்படுகிறது என் உள்ளம் !
அதை நீ வாங்கிக் கொண்டபோதே
சம்மதம் தெரிவித்தது
உன் விழியில் வழிந்த கண்ணீர் !
உன்னிடம் கேட்காமலேயே
நீ எனக்காக கொண்டு வந்திருந்த
கைக்குட்டை எடுத்து
உன் கண்ணீர் துடித்தன என் விரல்கள் !
இது போதும் அன்பே
நாம் காதலில் வென்றுவிட்டோம்
காலத்தையும் வென்றுவிட்டோம் !
2 comments:
do we get to see a video of this :)
If I take a short film of this kind.. will let you know :)
Post a Comment