Sunday, July 24, 2011

தேடல்..

பகலிலும் உதிக்கும்
நிலவு நீ !

துயிலெழுந்த பின்னும் தொடர்கின்ற
கனவு நீ !

பூவுக்குள் வீசும்
புயல் மழை நீ !

புன்னகையால் பேசும்
புது மொழி நீ !

மண்ணிலும் தோன்றும்
மின்னல் நீ !

விண்ணிலும் முளைக்கும்
மலர்க் கொடி நீ !

தேடுகிறேன் உன்னை
என் கண்மணிகள் தேயும் வரை
வாடுகிறேன் அன்பே
நீ என் வாசல் சேரும் வரை !!

No comments:

குறளோசை

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.