Sunday, July 10, 2011

மாயை

நிலவிடம் ஒளியை
கடன் வாங்க நினைதேன்,
பிறகு தான் அறிந்தேன்
நிலவே ஒரு கடனாளி என்று..

தேன்கூட்டுத் தேனை
களவாட நினைத்தேன்,
பிறகு தான் அறிந்தேன்
தேனீயே ஒரு களவாணி என்று..

உலகையே எனக்கு
சொந்தமாக்க நினைத்தேன்,
பிறகு தான் உணர்தேன் - என்
உயிரே எனக்கு சொந்தமில்லை என்று !!

1 comment:

Poornima said...

ellam maayai.. ellam maayai :)

குறளோசை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.