Friday, May 6, 2011

எதுகையோ ? மோனையோ ?

கவிதைகளால் வர்ணிக்க நினைத்தேன்
உன்னை - ஆனால்
வார்த்தைகளுக்குக் கூட பிடிக்கவில்லை
என்னை !

'கண்களைப் பார்த்து பேசு' என்றது
சிறப்பியல்பு மேம்பாட்டு நூல்;
உன் கண்களைப் பார்த்ததும்
ஊமையாய் போனது என் மனதில் எழுந்த சொல் !

காவிரி ஆறாய் பொங்கி வந்த
என் காதல் மொழி,
கார்ப்பரேஷன் குழாய் போல் காற்று விட்டது
நீ அருகில் வந்த நொடி !

சொன்னால் விழுமோ செருப்படி ?
அதிலிருந்து தப்பிப்பது எப்படி ? :-)

No comments:

குறளோசை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.