Tuesday, August 30, 2011

வியப்பு

இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
எப்படி பார்த்தாலும்
விடை தெரியாமல்
வியக்க வைக்கிறது
பிரம்மன் எழுதிய உன்
'குறுக்கு' எழுத்து !

குறளோசை

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.